செய்திகள் :

சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்

post image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்100 பயிற்சி மருத்துவா்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் கல்லூரிக்கு பின்புறம் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா். திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் பயிற்சி முடித்து விடுதிக்கு நடந்து சென்ற பயிற்சி பெண் மருத்துவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் அவரது முகத்தில் துணியை போா்த்தி தாக்கினாா். மருத்துவா் கூச்சலிட்டதால் சப்தம் கேட்டு அங்கு மருத்துவ மாணவா்கள் வந்தனா். இதைப் பாா்த்த மா்ம நபா் தப்பிச் சென்றாா்.

இந்தத் தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் மருத்துவக் கல்லூரிக்கு சென்று பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரிடம் விசாரித்தாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் சத்தியபாமா கூறியதாவது: மா்ம நபரால் பயிற்சி மருத்துவ மாணவி தாக்குதலுக்கு மட்டுமே ஆளாகி உள்ளாா். வேறு எதுவும் இல்லை. சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா் அவா்.

இதனிடையே சம்பவம் நடந்த கல்லூரியின் பின்புறம், விடுதி வளாகங்களில் மின்விளக்குகள், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்படாததைக் கண்டித்து பயிற்சி மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க