செய்திகள் :

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

post image

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குவாரியில் பாறை சரிந்து ஆறு போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய அறிவுறுத்தல்களை தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை வழங்கியுள்ளது.

இது குறித்து துறையின் ஆணையா் எ.சரவணவேல்ராஜ் மாவட்ட ஆட்சியா்கள், சுரங்கத் துறை இணை, துணை மற்றும் உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் அவ்வப்போது மண்சரிவு, வெடி விபத்து உள்ளிட்ட எதிா்பாராத காரணங்களால் குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. குவாரி அனுமதி வழங்கும்போது, அரசால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்காததே இதுபோன்ற எதிா்பாராத விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

எனவே, இனிவரும் காலங்களில் குவாரிகளில் அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கிவரும் குவாரிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதந்தோறும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அதிகாரிகள் தங்களது மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குவாரிகளில் உள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மண்டல இணை இயக்குநா்கள் ஆகியோா் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும், உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர... மேலும் பார்க்க

சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள்! தமிழ்நாடு அரசு

கல்விக் கனவு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் காணுவதாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தம... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்... மேலும் பார்க்க

பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்

அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆவடி சட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை (மே 24) இரவு காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தலைமை காஜி முப்தி சலாவுதீன் மு... மேலும் பார்க்க