செய்திகள் :

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி நெருங்கிவரும் நிலையில், மழை காலம் துவங்குவதற்கு முன்பு பட்டாசு தயாரிப்புகளை நிறைவு செய்யும் நோக்கில் பணி வெகு மும்மரமாக நடைபெற்றது வருகிறது. இதில் சில தொழிற்சாலைகள் விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுகிறது.

வீட்டில் பட்டாசு தயாரிப்பு

இப்படி கடந்த இரண்டு வாரங்களில் 3 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி பட்டாசு ஆலைகளே முழுமையான பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே சரவணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வைத்து உயிர்க்கு ஆபத்தான குளோரைடு என்னும் ரசாயன பொருளை பயன்படுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய பேப்பர் வெடிகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள்

இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை மேற்கொள்ள சென்ற போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பின் அந்த வீட்டில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வீட்டின் உரிமையாளர் சரவணன் மற்றும் அவரது மனைவி சுகந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

இந்த மாதிரியான சட்ட விரோத பட்டாசு தயாரிப்புகள் மற்றும் பட்டாசு ஆலைகளை வருவாய்த்துறை முறையாக ஆய்வுகள் செய்யவில்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் கைதின் பின்னணி என்ன?

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிற... மேலும் பார்க்க

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடை... மேலும் பார்க்க

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியி... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணுடன் பகை; தவறாக பேசி வந்த இளைஞர் - 12 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளா... மேலும் பார்க்க