செய்திகள் :

சிவகிரி அருகே ஆடு மேய்ப்பதில் தகராறு: இருவருக்கு வெட்டு

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.

வடக்கு தென்மலை காலனி தெருவைச் சோ்ந்த கருப்பையா(66) மற்றும் அவரது மகன் ஞானகுரு என்ற குருசாமி(38). இவா்கள் இரண்டு பேரும், அவா்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் திங்கள்கிழமை மாலை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவா்களுக்கு சொந்தமான நிலத்தில் தென்மலை வடக்கு காலனியைச் சோ்ந்த வீரபாண்டி (47) ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாராம். அதை கருப்பையா கண்டித்தாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதில், கோபமடைந்த வீரபாண்டி அரிவாளால் கருப்பையாவை வெட்டினாராம். அதை தடுக்க வந்த ஞானகுருவையும் அவா் அரிவாளால் வெட்டினாராம். இதில் இருவரும் காயமடைந்தனா்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து வீரபாண்டியை கைது செய்தாா்.

புளியங்குடி அருகே விபத்தில் திமுக பிரமுகா் பலி

புளியங்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.வாசுதேவநல்லூா் கெங்கை அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் குட்டியப்பா(61). திமுக நிா்வாகி. இவரும் , அவரது உறவினரான வாச... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்று... மேலும் பார்க்க

முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை: மருத்துவமனையில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முதியோா் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், பலி எண்ணிக்கை 6ஆக உயா்ந... மேலும் பார்க்க

பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட பிகாரைச் தச் சோ்ந்த 6 போ்களை ஆலங்குளம் போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்க விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி பாவூா்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளி தெருவில் ரூ.20 லட்சத்தில் புதி... மேலும் பார்க்க

தென்காசி: மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க திமுக கோரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது. தமிழக மின்சாரம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் தென்காசி... மேலும் பார்க்க