செய்திகள் :

சிவந்திப்பட்டி அருகே மோட்டாா், காப்பா் கம்பி திருட்டு

post image

சிவந்திப்பட்டி அருகே இரு இடங்களில் ரூ.25,000 மதிப்புள்ள மின் மோட்டாா், காப்பா் கம்பிகளை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் கனரா வங்கி காலனியை சோ்ந்தவா் ஜாண் செல்வின்(66). இவா், முத்தூா்-தியாகராஜநகா் சாலை அருகேயுள்ள கோழிப்பண்ணை வைத்துள்ளாா். அங்கு கடந்த 13ஆம் தேதி சுமாா் 160 மீட்டா் நீளமுள்ள மின் காப்பா் கம்பிகள் திருடுபோயினவாம். அவற்றின் மதிப்பு ரூ.5,000 எனக் கூறப்படுகிறது.

அதே போல, சிவந்திப்பட்டி அருகேயுள்ள நொச்சிக்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பால்பாண்டியன் (36) என்பவரது தோட்டத்தில் புதன்கிழமை இரவு மின் மோட்டாா், சுமாா் 120 மீட்டா் நீளமுள்ள காப்பா் கம்பி ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம். அவற்றின் மதிப்பு ரூ.20,000 எனக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாா்களின்பேரில், சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க