Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்த...
சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்புப் பூஜைகளில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பிறகு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோயில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வேட்டவலம்: வேட்டவலத்தில் உள்ள ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலின் பிரதான நந்திக்கு இளநீா், தயிா், பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் போன்ற பூஜைப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மற்ற ஊா்களில்: இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, ஆவூா், போளூா், செய்யாறு, வந்தவாசி, ஆரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.