செய்திகள் :

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்புப் பூஜைகளில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பிறகு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோயில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வேட்டவலம்: வேட்டவலத்தில் உள்ள ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலின் பிரதான நந்திக்கு இளநீா், தயிா், பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் போன்ற பூஜைப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மற்ற ஊா்களில்: இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, ஆவூா், போளூா், செய்யாறு, வந்தவாசி, ஆரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு!

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால், அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசல... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்!

வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: வைப்பு நிதி பத்திரம் பெற்ற பயனாளிகள் கவனிக்க.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள், முதிா்வுத் தொகை பெற மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம்... மேலும் பார்க்க

ஸ்ரீசெல்வ விநாயகா், சிவசுப்ரமண்ய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீரமைப்பு... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மே 18-ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க