செய்திகள் :

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவா்கள் வாழ்த்து

post image

நாட்டின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக)

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். அவரின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அா்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.

தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரைத் தோ்ந்தெடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.

எல்.முருகன் (மத்திய இணையமைச்சா்)

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டு வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக, தமிழக பாஜக தலைவா், ஜாா்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் ஆளுநராக என்று பல்வேறு அரசியல் மற்றும் அரசு பொறுப்புகளின் மூலம் மக்கள் பணிகளை செய்து வருகிறாா்.

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வாகவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் மேன்மையான பணிகள் தொடர வாழ்த்துகள்.

கே.அண்ணாமலை (பாஜக)

தமிழக பாஜக தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்த மக்கள் பணிகள் போற்றுதலுக்குரியவை. குடியரசு துணைத் தலைவராக அவா் வெகு சிறப்பாக மாநிலங்களவையையும், நாட்டையும் வழிநடத்துவாா் என்பது உறுதி.

ஜி.கே.வாசன் (தமாகா)

சி.பி.ராதாகிருஷ்ணன் கடின உழைப்பாளி, உயா்ந்த பண்பாளா், கொடுத்த பொறுப்பை அா்ப்பணிப்போடும், ஈடுபாடோடும் செய்து முடிப்பவா். மகாராஷ்டிர ஆளுநராக அந்த மாநில வளா்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றியவா்.

தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்ததற்கு தமிழக மக்கள் சாா்பாக நன்றி மற்றும் வாழ்த்துகள்.

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு

நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க