அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். செப். 12ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது,
''குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அவர் தனது கடமைகளை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
இந்தியாவின் ஜனநாயகத்தின் உணர்வை நிலைநிறுத்தி, நாம் நிலைநிறுத்தும் கொள்கைகளை பிரதிபலிக்கும் உறுதியான போராட்டத்திற்காக சுதர்சன் ரெட்டியையும் பாராட்டுகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
I warmly congratulate Hon'ble Thiru. #CPRadhakrishnan on his election as the #VicePresident of India and hope that he will discharge his duties with steadfast resolve to the constitutional framework and the democratic ideals of our nation.
— M.K.Stalin (@mkstalin) September 9, 2025
I also commend Thiru. Sudershan Reddy…
இதையும் படிக்க |சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: செப்.12-ல் குடியரசு துணைத் தலைவராகிறார்?