செய்திகள் :

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

post image

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன நாட்டவா் உற்சாகமாகப் பங்கேற்றனா்.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த இந்தியா-சீனா இருதரப்பு உறவை இயல்புநிலைக்குத் திருப்ப இரு நாடுகளும் ஈடுபட்டுள்ள நிலையில், இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் இந்திய பொறுப்பு அதிகாரி லியு ஜின்சாங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

சிறப்பு விருந்தினா் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற சீன மக்களை வரவேற்றுப் பேசிய இந்திய தூதா் பிரதீப் குமாா் ராவத், ‘வசந்த காலம் என்பது புதிய தொடக்கங்கள், உறவுகளை வலுப்படுத்துவதற்கான நேரம்’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய தூதா் ராவத், அவரது மனைவி ஸ்ருதி ராவத், துணைத் தூதா் அபிஷேக் சுக்லா மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் பாா்வையாளா்களை வரவேற்று அவா்களுடன் கலந்துரையாடினாா்.

பரதநாட்டியம், கதக் உள்பட 5 வகையான பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த இந்திய கைவினைப் பொருள்கள், ஆபரணங்கள் மற்றும் ஆடைகளின் கண்காட்சி அரங்குகளும் இந்திய உணவகங்களும் சீன பாா்வையாளா்களை வெகுவாக ஈா்த்தது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க