செய்திகள் :

சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

post image

சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக, சீனாவின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அரசு முயற்சி செய்து வருகின்றது. இதனால், சீன அதிபர் ஸி ஜிங்பிங் உடனான உரையாடலுக்கு முன்பு, தைவான் நாட்டுக்கு வழங்கவிருந்த ரூ.3,525 கோடி மதிப்பிலான ராணுவ நிதிக்கு, அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற உடன் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீதான இறக்குமதி வரிகளை அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டார். ஆனால், தற்போது சீனாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருவதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யாமல் தவிர்க்க, அந்தச் செயலியின் சீன உரிமையாளரிடம் இருந்து பிரிக்கும் ஒப்பந்தத்திற்கான வரையறைகள் குறித்து, சீன அதிபருடன் டிரம்ப் உரையாடுவார் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளை மாளிகையின் வெளியே அமெரிக்க செய்தியாளர்களுடன் நேற்று (செப்.18) அதிபர் டிரம்ப் பேசியதாவது:

”டிக்டாக் குறித்து எங்களிடம் ஒரு ஒப்பந்தம் உள்ளது. சீனாவுடன் நான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளேன். இதை உறுதி செய்ய வெள்ளிக்கிழமை நான் அதிபர் ஸி ஜிங்பிங் உடன் உரையாடபோகிறேன்” எனப் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

Chinese media have reported that Chinese President Xi Jinping and US President Donald Trump spoke by phone.

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதல் 1,90,000-க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. ஆப்... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல... மேலும் பார்க்க

ஆப்கனில் பிரிட்டன் தம்பதி விடுதலை! மாதங்கள் கழித்து மனம் மாறிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சொல்லப்படாத குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆ... மேலும் பார்க்க

உலகம் கவனிக்கிறது: பாகிஸ்தான் - பயங்கரவாதிகள் உறவு குறித்து இந்தியா!

ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்த பாதிப்புகள் குறித்தும், தங்களுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகள் மாறி மாறி உண்மையைக் கொட்டி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஒரே நாளில் நடைபெற்ற 2 வெவ்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், நேற்ற... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை அல்ல! - முன்னாள் பிரதமர் மறுப்பு!

நேபாளத்தின் ஜென் - ஸி போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு கொடுக்கவில்லை எனப் பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார். நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடைகள் ... மேலும் பார்க்க