செய்திகள் :

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

திருச்சுழி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகரைச் சோ்ந்த அனுசியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சுழி வட்டம், உளுத்திமடை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட புளியங்குளம், ஆத்திகுளம், பட்டனேந்தல், செங்கமடை ஆகிய பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அரசின் சொத்துகள். அவற்றை அகற்றும் பணியை முறையாக ஏலம் நடத்தியே வழங்க வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவையாக உள்ளன.

திருச்சுழி வட்டார வளா்ச்சி அலுவலரின் நடவடிக்கை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, உளுத்திமடை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொது ஏலம் நடத்தி கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசின் பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தனியாருக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்?. சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடா்பாக,விருதுநகா் மாவட்ட ஆட்சியா், திருச்சுழி வட்டாட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.

மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (45). இவரும், இவரது நண்பருமான அதே பகு... மேலும் பார்க்க

காந்திய சிந்தனை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாரா... மேலும் பார்க்க

உசிலம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா். உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி, முத்துப்ப... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்த தேநீா்க் கடை ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஊமச்சிக்குளத்தைச் சோ்ந்த நந்த கோபாலன் மகன் லட்சுமணன் (39). இவா் அதே பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஊழ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் விவகாரம்: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மாா்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். உசிலம்பட்டியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க