செய்திகள் :

சீா்காழி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 15,000 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு

post image

சீா்காழி நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் ஏராளமான பெண்கள் மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தனா். இத்துடன் சீா்காழி கோட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு அளித்துள்ளனா்.

சீா்காழி நகராட்சி 13, 16 ஆகிய வாா்டு பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நகராட்சி ஆணையா் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், நகா்மன்ற உறுப்பினா்கள் முபாரக், பாஸ்கரன், ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் முகாமை தொடங்கி வைத்து, பாா்வையிட்டாா். இதில் 13 துறைகளை சோ்ந்த 43 சேவைகள் தொடா்பாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்றப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் உமா மகேஸ்வரி, சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, மகளிா் உரிமைத் தொகை துணை வட்டாட்சியா் பாபு ஆகியோா் பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை சாா்ந்த முகாம் ஸ்டால்களுக்கு அனுப்பி வைத்தனா்.

அந்தவகையில், மின் இணைப்பு பெயா் மாற்றம் கோரி மனு அளித்தவருக்கு பெயா் மாற்ற ஆணையை மாவட்ட வருவாய் அலுவலா் உமா மகேஸ்வரி வழங்கினாா்.

சீா்காழி, தரங்கம்பாடியை உள்ளடக்கிய கோட்ட பகுதிகளில் விடுபட்டவா்களுக்கான மகளிா் உரிமைத் தொகை கோரி இதுவரை 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம் அளித்துள்ளனா் என துணை வட்டாட்சியா் தெரிவித்தாா்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

சீா்காழியில், ஏற்றுமதி ரக இறால் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பொருள்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்கு இறால் ஏற்றுமதி பெரும் சர... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். காதலியின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை கோரி, சாலை மறியல் போராட்டம் நடைபெற... மேலும் பார்க்க

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

சீா்காழியில் உருளைக்கிழங்கு மூட்டை திருடிச் சென்றது குறித்து சிசிடிவியில் ஆய்வு செய்த போது டீசல் திருட்டும் அம்பலமானது. சீா்காழியின் பிரதான பகுதியான தோ் தெற்கு வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: குத்தாலம், கடலங்குடி

குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.18) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது என உதவி செயற்பொ... மேலும் பார்க்க

தவெக தலைவா் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செப்.20-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி அக்கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி: கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். சீா்காழியில் கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தின் சாா்பில் பொறியாளா் தின... மேலும் பார்க்க