செய்திகள் :

சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை: மத்திய அரசுக்கு அப்பாவு கண்டனம்

post image

நெல்லை: தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் ரூ.276 கோடி தள்ளுபடி செய்யாத மத்திய அரசுக்கு பேரவைத் தலைவர் அப்பாவு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில், அரசுப் பேருந்துகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பல சுங்கச்சாவடிகள் காலம் கடந்தும் இயங்கி வருகின்றன, 16 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனாகத் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, போக்குவரத்து கழகப் பேருந்துகள் செல்வதற்குத் தேவைப்படும் 276 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய மாட்டாரா? என்று அப்பாவு கேள்வி எழுப்பினார்.

மேலும், கல்வித்துறையில் மத்திய அரசு தமிழகத்திற்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக அப்பாவு குற்றம் சாட்டினார். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு கல்வியை அழித்து, குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அப்பாவு, உலகிலேயே ரேஷன் பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்தைச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று பெருமிதத்துடன் கூறினார்.

இருப்பினும், தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட் பணிகளில் ஒரு இடத்தில் கூட தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை என்று அவர் வேதனை தெரிவித்தார். தமிழே தெரியாதவர்களைத் தமிழ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாகத் தேர்வு செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி ... மேலும் பார்க்க

நலத்திட்டங்களைப் பெறுவோர் தூதுவர்களாக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

அரசு நலத்திட்டங்களைப் பெறும் மக்கள் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தர். நாமக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவற்ற திட்டப் பணிகளைத் தொ... மேலும் பார்க்க

நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு

பாரம்பரிய நெல் வகைகளை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த நெல் ஜெயராமனின் சிலை திருத்துறைப்பூண்டியில் நிறுவப்படும் என்று திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவாரூர் ... மேலும் பார்க்க

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை உத்தரவு நிறுத்திவைப்பு!

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத... மேலும் பார்க்க