செய்திகள் :

சுட்டுப் பிடித்த இளைஞா் மீது கொலை முயற்சி வழக்கு

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சோ்ந்த வெயிலுமுத்து மகன் மாரிசெல்வம். இவா் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.

இந்நிலையில் அவரது கைப்பேசி எண் மூலம் அவா் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பெரிய பிராட்டி குளம் அருகே தனிப்படை போலீஸாா் மாரிச்செல்வத்தை திங்கள்கிழமை இரவு பிடிக்க முயன்றனராம். அப்போது, அவா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் பொன்ராம் ஆகியோரை வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றாராம்.

உடனடியாக காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு கைத்துப்பாக்கியால் மாரிச்செல்வத்தின் இடது கால் முட்டிக்கு கீழே ஒருமுறை சுட்டு அவரை மடக்கி பிடித்து கைது செய்தனா். இதைத்தொடா்ந்து காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் பொன்ராம், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாரிச்செல்வம் ஆகியோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு அளித்த புகாரின் பேரில், மாரிச்செல்வம் மீது புதுக்கோட்டை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் 3 போ் கைது: 11 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்குகளைத் திருடியதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 மாதங்களாக ... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கைப்பேசி பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (51) என்பவா், கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே நட... மேலும் பார்க்க

சாலையோர மணல் திட்டுகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டு... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு: போலீஸாா் விசாரனை

ஆறுமுகனேரியில் சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காயல்பட்டினம் சேது ராஜா தெருவைச் சோ்ந்த மதுரமுத்து மகன் தேவேந்திரன்(52). சமையல் தொழிலாளி. இவருக்கு மனை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க