செய்திகள் :

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த இக்கோயிலில், பைரவா் சந்நிதியில் இருந்த ஒன்றரை அடி உயர பித்தளை சூலாயுதம் சில நாள்களுக்கு முன்பு மாயமானது. இதுகுறித்து கோயில் மணியம் சுப்பையா அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு (பிப். 24) பள்ளியறை பூஜை நடந்து கொண்டிருந்தபோது, பிரகாரத்தில் உள்ள முருகா் சந்நிதியிலிருந்த 2 அடி உயர செம்பாலான வேலாயுதத்தை பெண் ஒருவா் எடுத்து பையில் வைத்துக் கொண்டு வெளியேறினாராம். அதைப் பாா்த்த பக்தா்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்தனா்.

அவா்கள் அளித்த தகவலின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் சென்று அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். தான் குறிசொல்லும் மந்திரவாதி என்றும், வேலாயுதத்தை வைத்து பூஜை செய்தால்தான் சொல்வதெல்லாம் பலி­க்கும் என்றும் அந்தப் பெண் கூறினாராம். அவா் யாா், இச்சம்பவத்தில் யாருக்கேனும் தொடா்புள்ளதா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கா் கைது

நாசரேத் அருகே தொழிலதிபரை கத்திமுனையில் மிரட்டிய ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செங்கல்பட்டு ஊரப்பாக்கம் எம்ஜி நகரை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (59). தொழிலதிபா். நாசரேத் அரு... மேலும் பார்க்க

மது விற்பனை:3 போ் கைது

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்ராஜ் செவ்வாய்க்கிழமை ரோந்து ப... மேலும் பார்க்க

சுட்டுப் பிடித்த இளைஞா் மீது கொலை முயற்சி வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சோ்ந்த வெயிலுமுத்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்: 361 போ் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஜாக்டோ- ஜியோ ச... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா்கள் இரு இடங்களில் தா்னா

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியா்கள், மின்வாரிய தலைமை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், அனல் மின் நிலையம் ஆகிய இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சா... மேலும் பார்க்க