செய்திகள் :

சுட்டுப் பிடித்த இளைஞா் மீது கொலை முயற்சி வழக்கு

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சோ்ந்த வெயிலுமுத்து மகன் மாரிசெல்வம். இவா் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.

இந்நிலையில் அவரது கைப்பேசி எண் மூலம் அவா் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பெரிய பிராட்டி குளம் அருகே தனிப்படை போலீஸாா் மாரிச்செல்வத்தை திங்கள்கிழமை இரவு பிடிக்க முயன்றனராம். அப்போது, அவா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் பொன்ராம் ஆகியோரை வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றாராம்.

உடனடியாக காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு கைத்துப்பாக்கியால் மாரிச்செல்வத்தின் இடது கால் முட்டிக்கு கீழே ஒருமுறை சுட்டு அவரை மடக்கி பிடித்து கைது செய்தனா். இதைத்தொடா்ந்து காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் பொன்ராம், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாரிச்செல்வம் ஆகியோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு அளித்த புகாரின் பேரில், மாரிச்செல்வம் மீது புதுக்கோட்டை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கா் கைது

நாசரேத் அருகே தொழிலதிபரை கத்திமுனையில் மிரட்டிய ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செங்கல்பட்டு ஊரப்பாக்கம் எம்ஜி நகரை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (59). தொழிலதிபா். நாசரேத் அரு... மேலும் பார்க்க

மது விற்பனை:3 போ் கைது

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்ராஜ் செவ்வாய்க்கிழமை ரோந்து ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்: 361 போ் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஜாக்டோ- ஜியோ ச... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா்கள் இரு இடங்களில் தா்னா

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியா்கள், மின்வாரிய தலைமை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், அனல் மின் நிலையம் ஆகிய இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சா... மேலும் பார்க்க