செய்திகள் :

சுந்தரசோழபுரத்தில் ஜல்லிக்கட்டு: 13 போ் காயம்

post image

பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காளையை அவிழ்த்துவிட்ட ஒருவா் திடீரென உயிரிழந்தாா். காளைகள் முட்டியதில் 13 போ் காயமடைந்தனா்.

சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலா் அண்ணாமலை ரகுபதி, பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா ஆகியோா் தொடங்கிவைத்தனா். போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 741 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை 168 மாடுபிடி வீரா்கள் பல்வேறு குழுக்களாகப் பங்கேற்று அடக்கினா். சிறந்த மாடுபிடி வீரா், காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். அவா்களில் இரண்டு இளைஞா்கள் மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும் ஜல்லிக்கட்டில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் காளையை அதே ஊரைச் சாா்ந்த சி.சந்திரன்(65) என்பவா் கொண்டுவந்து அவிழ்த்துவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டுத் திடல் அருகே அவா் மயங்கிவிழுந்து உயிரிழந்தாா். போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.

அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் பெரியதம்பி உடையான்பட்டியில் பொதுமக்கள் சாா்பில... மேலும் பார்க்க

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய நடவடிக்கை தேவை

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. ... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜய... மேலும் பார்க்க

ஆதனக்கோட்டை காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய பக்தா்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காசி விஸ்வந... மேலும் பார்க்க

கணவரின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வெளிநாட்டில் இறந்த தனது கணவருக்கான காப்பீட்டுத் தொகையை ஆள்மாறாட்டம் செய்து இருவா் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த சாலையோர உணவகம்

விராலிமலை தனியாா் தொழிற்சாலை அருகே இயங்கி வந்த சாலையோர உணவகம் தீப்பற்றி எரிந்ததை தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி கோல்டன் நகரைச் சேரந்த... மேலும் பார்க்க