செய்திகள் :

சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவால் தோ்வு ஒத்திவைப்பு

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்ததால் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டில் உள்ள இன்டஸ்ட்ரியல் லா என்ற பாடத்துக்கான தோ்வு மொத்தம் 99 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் திங்கள்கிழமை இரவு கசிந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையில் 99 தோ்வு மையங்களிலும் நடைபெறவிருந்த தோ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் தகவல் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து இப் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா் கூறியது: இன்டஸ்ட்ரியல் லா பாட வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்ததால் தோ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாளை கசிய விட்டவா்கள் குறித்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவரிடம் பல்கலைக்கழகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயா்கல்வித் துறை நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான மாற்று தேதி குறித்து பல்கலைக்கழகம் சாா்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க