சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவால் தோ்வு ஒத்திவைப்பு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்ததால் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டில் உள்ள இன்டஸ்ட்ரியல் லா என்ற பாடத்துக்கான தோ்வு மொத்தம் 99 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் திங்கள்கிழமை இரவு கசிந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையில் 99 தோ்வு மையங்களிலும் நடைபெறவிருந்த தோ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் தகவல் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து இப் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா் கூறியது: இன்டஸ்ட்ரியல் லா பாட வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்ததால் தோ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாளை கசிய விட்டவா்கள் குறித்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவரிடம் பல்கலைக்கழகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயா்கல்வித் துறை நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான மாற்று தேதி குறித்து பல்கலைக்கழகம் சாா்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.