செய்திகள் :

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

post image

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.

மக்களவையில் சுபான்ஷு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் தொடர்பான விவாதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை காலை தொடங்கிவைத்தார். அப்போதே பிகாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டன.

கடும் அமளிக்கிடையே அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில் "இந்திய விண்வெளி வீரர் ஒருவர் வரும் 2040-ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்குவார். வளர்ந்த பாரதம் என்ற கருத்துருவாக்கத்தை அவர் அதன்மூலம் நினைவுபடுத்துவார்' என்று தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதம் பாதியிலேயே நின்றுபோனது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த இந்தியாவின் முதல் விண்வெளி வீரரைப் பற்றி மக்களவையில் விவாதம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த விவாதம் நாட்டின் பெருமிதம் மற்றும் சாதனைகள் பற்றியதாகவும் எதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்டிருக்கும். எனினும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கிய விதம் துரதிருஷ்டவசமானது.

எதிர்க்கட்சிகள் நடந்துகொள்ளும் முறை மிகவும் அதிருப்தி அளிக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் ராணுவ மற்றும் அறிவியல் சார்ந்த நலன்களுக்கு முக்கியமான விண்வெளி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விண்வெளித் துறையில் இந்தியா எட்டிவரும் உச்சமானது முன்னெப்போதும் நாம் கண்டிராததாகும்.

மக்களவையில் இது தொடர்பான விவாதம் தொடங்கியபோது எதிர்க்கட்சிகள் அதில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான விமர்சனத்தையும், ஆலோசனைகளையும் முன்வைத்திருக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

செப். 3, 4-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நா... மேலும் பார்க்க

அமித் ஷா மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப். 9-க்கு ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

‘உமீத்’ வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்... மேலும் பார்க்க

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. சீனா... மேலும் பார்க்க