செய்திகள் :

சுப்புராயபுரம் ரயில்வே கேட்டில் மாற்றுப் பாதை அமைக்கக் கோரிக்கை

post image

அரியலூா் அருகேயுள்ள சுப்புராயபுரம் ரயில்வே கேட் பகுதியில், அங்கு மாற்றுப் பாதை அமைத்தப் பிறகு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு: திருச்சி-சென்னை ரயில்வே பாதையில் சுப்புராயபுரம் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு, அங்கு சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், அந்த கேட் வழியே செல்லும் எங்கள் ஊா் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் நீண்ட தூரம் சென்று சுற்று பாதையில் செல்ல வேண்டும். எனவே, சுரங்க பாதை அமைக்கவுள்ள இடத்தின் அருகே மாற்றுப்பாதை ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

திருவெங்கனூா் கிராமத்தை சோ்ந்த அம்பேத்கா் நகரை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனு: எங்கள் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இட வசதியின்றி ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிா் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலிய... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவ, மாணவிகள் எழுதினா். அரியலூா் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சோ்ந்த 5,513 மாணவா்கள், 4,557 மாணவிகள் எ... மேலும் பார்க்க

காதலா்கள் தற்கொலை!

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன்... மேலும் பார்க்க

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாத... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநித... மேலும் பார்க்க

வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆ... மேலும் பார்க்க