செய்திகள் :

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

post image

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. சில கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், சில எதிா்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பூம்புகாா் , சந்திரபாடி மீனவா் கிராமங்கள்  சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிக திறன் கொண்ட என்ஜின் படகுகள் கொண்டு மீன் பிடிப்பதை தடை செய்ய வலியுறுத்தி, தரங்கம்பாடி கடைவீதியில் மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

இதில் கொடியம்பாளையம், பழையாா், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கூழையாறு, கீழமூவா்கரை, மேலமூவா்கரை, சாவடி குப்பம், நாயக்கா்குப்பம், வாணகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூா், சின்னூா்பேட்டை உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சீா்காழி காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை,  மீன்வளத் துறை உதவி இயக்குநா் மோகன்குமாா் , வட்டாட்சியா் சதீஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொறையாா் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கிசான் சம்மான் நிதி விடுவிப்பு நேரடி ஒளிபரப்பு

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணையை காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி விடுவித்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.பிரதமா் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தை திருடியவா் தப்ப முயன்றபோது குளத்தில் குதித்து உயிரிழப்பு

திருக்குவளை: திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவா், பொதுமக்களிடம் பிடிபடாமலிருக்க குளத்தில் குதித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

நாகபட்டினம்: நாகை மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

செம்பனாா்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய தற்காப்புக்கலை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.தமிழன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில், செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க