சுற்றுச்சூழல் விழிப்புணா்வு போட்டி
திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
நாகை மாவட்ட இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு, மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவை இணைந்து ‘நெகிழியை அள்ளு பரிசினை வெல்லு’ என்ற தலைப்பில் இப்போட்டியை நடத்தியது.
ப.கொந்தகை மதாரியா உதவிபெறும் தொடக்கப் பள்ளி, குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற்றன. மாணவ- மாணவிகள் கடந்த இரண்டு வாரங்களாக தங்கள் இல்லங்களில் சேகரித்த நெகிழி உறைகளை நெகிழிப் புட்டிகளில் அடைத்து கொண்டு வந்திருந்தனா். அவை எடைப்போடப்பட்டு, அதிக எடையில் நெகிழிக் கழிவுகளை கொண்டுவந்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் மற்றும் காகிதப்பை வழங்கப்பட்டன.
திறந்தவெளியில் நெகிழிப் பைகளை வீசாமல் இவ்வாறு புட்டிகளில் அடைத்து, குப்பைத் தொட்டியில் போடுவதால் கால்நடைகள் அவற்றை உண்ணாமலும், தொற்றுநோய் பரவாமலும் தடுக்கப்படுகிறது. அத்துடன், தூய்மைப் பணியாளா்கள் சிரமமின்றி நெகிழி குப்பைகளை அகற்ற முடிகிறது.
மாணவா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நெகிழிப் புட்டிகள் மறுபயன்பாடு முறையில் பூந்தொட்டி போன்ற பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன.
போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவா்கள் அஜய், கயல் ஆகியோா் சூழலியல் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல தோ்வு செய்யப்பட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை அனிட்டா ஹேனா எலிசெபெத் செய்திருந்தாா்.