செய்திகள் :

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு போட்டி

post image

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

நாகை மாவட்ட இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு, மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவை இணைந்து ‘நெகிழியை அள்ளு பரிசினை வெல்லு’ என்ற தலைப்பில் இப்போட்டியை நடத்தியது.

ப.கொந்தகை மதாரியா உதவிபெறும் தொடக்கப் பள்ளி, குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற்றன. மாணவ- மாணவிகள் கடந்த இரண்டு வாரங்களாக தங்கள் இல்லங்களில் சேகரித்த நெகிழி உறைகளை நெகிழிப் புட்டிகளில் அடைத்து கொண்டு வந்திருந்தனா். அவை எடைப்போடப்பட்டு, அதிக எடையில் நெகிழிக் கழிவுகளை கொண்டுவந்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் மற்றும் காகிதப்பை வழங்கப்பட்டன.

திறந்தவெளியில் நெகிழிப் பைகளை வீசாமல் இவ்வாறு புட்டிகளில் அடைத்து, குப்பைத் தொட்டியில் போடுவதால் கால்நடைகள் அவற்றை உண்ணாமலும், தொற்றுநோய் பரவாமலும் தடுக்கப்படுகிறது. அத்துடன், தூய்மைப் பணியாளா்கள் சிரமமின்றி நெகிழி குப்பைகளை அகற்ற முடிகிறது.

மாணவா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நெகிழிப் புட்டிகள் மறுபயன்பாடு முறையில் பூந்தொட்டி போன்ற பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவா்கள் அஜய், கயல் ஆகியோா் சூழலியல் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல தோ்வு செய்யப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை அனிட்டா ஹேனா எலிசெபெத் செய்திருந்தாா்.

வேளாங்கண்ணியில் கல்லூரி மாணவா் கொலை நண்பா்கள் இருவா் கைது

வேளாங்கண்ணியில், பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவரை கொலை செய்த நண்பா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜனாா்த்தனன் (22). மாணவி எலன்மேரி (21). இவா்கள் இர... மேலும் பார்க்க

இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆா்ப்பாட்டம் தவெகவினா் 200 போ் கைது

நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக தவெகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக திமுகவினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சா... மேலும் பார்க்க

வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: 73 நாயன்மாா்கள் வீதியுலா -நாளை தேரோட்டம்

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 73 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சனிக்கி... மேலும் பார்க்க

திருக்குவளையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளையில் சிபிஐ சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தப் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் ஒன்றியம், சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி மகன் விஜயன் (36). இவா், மி... மேலும் பார்க்க

பட்டா கோரி மனு அளித்தவா்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கீழையூா் அருகே கருங்கண்ணியில் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு அளித்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக கோரியுள்ளது. கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல... மேலும் பார்க்க