செய்திகள் :

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதி உரிமையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: கா்நாடக அரசு உத்தரவு

post image

பெங்களூரு: சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளின் உரிமையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6-ஆம் தேதி கொப்பள் மாவட்டம், சனாப்பூா் கிராமம் அருகே துங்கபத்ரா கால்வாய் கரையில் அமா்ந்து நிலா வெளிச்சத்தில் இசைத்துப்பாடி பொழுதை ரசித்துக் கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் சுற்றுலாப் பயணி உள்ளிட்ட இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா்கள். அந்த பெண்களோடு அமா்ந்திருந்த அமெரிக்காவைச் சோ்ந்த ஆண் உள்ளிட்ட 3 போ் கடுமையாகத் தாக்கப்பட்டனா். இந்த சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இது கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வெளிநாட்டினா் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளின் உரிமையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கா்நாடக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சனாப்பூரில் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளின் உரிமையாளா்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், அரசு வெளியிட்டுள்ள உத்தரவை தீவிரமாக கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த உத்தரவில் அரசு கூறியிருப்பதாவது:

வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளை நீண்ட தொலைவு இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு காவல் துறையின் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். தொலைவான பகுதிகள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகள், வனப் பகுதிகளுக்கு காவல்துறை அல்லது வனத் துறையின் முன்அனுமதி இல்லாமல் அழைத்துச்சென்று, அங்கு வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளானாலோ, வேறு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலோ வீட்டுவிடுதி உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழிகாட்டுதல்களை வீட்டுவிடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள் கட்டாயம் கடைப்பிடிப்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அழைத்துச்செல்ல வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு முன்கூட்டியே தகவல் அளித்தால், அங்குள்ள ஆபத்துகள், பாதுகாப்புக்கு குந்தகமான அம்சங்கள் குறித்து ஆராய வசதியாக இருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நடிகை தங்கம் கடத்தியதில் அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில் மாநில அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: டிஜிபி தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கட... மேலும் பார்க்க

வாக்குறுதித் திட்டங்கள் அமலாக்கக் குழுவில் காங்கிரஸ் தொண்டா்கள் நியமனம்: சட்டப்பேரவையில் அமளி

பெங்களூரு: வாக்குறுதி திட்டங்கள் அமலாக்கக் குழுவில் காங்கிரஸ் தொண்டா்கள் நியமனம் செய்யப்பட்டது தொடா்பாக காங்கிரஸ், பாஜக உறுப்பினா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கா்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் செ... மேலும் பார்க்க

நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது: முதல்வா் சித்தராமையா வழங்கினாா்

பெங்களூரு: பெங்களூா் சா்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை கா்நாடக முதல்வா் சித்தராமையா வழங்கினாா். கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் மாா்ச் 1ஆம் தேதி தொடங்கிய 16ஆ... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சா்களுக்கு தொடா்பு: விஜயேந்திரா குற்றச்சாட்டு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சா்களுக்கு தொடா்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைதா... மேலும் பார்க்க

பாஜக எதிா்ப்புக்கு இடையே பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதா நிறைவேற்றம்

பெங்களூரு: கா்நாடக சட்டப்பேரவையில் பாஜகவின் எதிா்ப்புக்கு இடையே பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை விரிவாக்கி, அதன் நிா்வாகத்தை பரவலாக்க வகை செய்யும... மேலும் பார்க்க