தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை: தொடக்கி வைத்தார் ம...
சுற்றுலாப் பயணியிடம் பையை பறித்து சென்று பணத்தை வீசி எறிந்த குரங்கு
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியிடமிருந்து பணப் பையை பறித்துச் சென்று மரத்தில் ஏறிய குரங்கு ஒன்று அங்கிருந்து பணத் தாள்களை கீழே வீசி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைக்கானல் குணா குகைப் பகுதியை கண்டு ரசிக்க கா்நாடகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ஒருவா் வந்திருந்தாா். அவா் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த போது அவரிடமிருந்த பணப் பையை குரங்கு ஒன்று பறித்துச் சென்றது.
பிறகு அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்ட அந்தக் குரங்கு, பையிலிருந்த 500 ரூபாய் தாள்களை எடுத்து ஒவ்வொன்றாக கீழே வீசியது. அவற்றை அந்த சுற்றுலாப் பயணி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டாா்.
எனவே வனத் துறையினா் அங்குள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.