செய்திகள் :

சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்: 3 போ் கைது

post image

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியை தாக்கி காரை சேதப்படுத்தியதாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் மனோ சித்தாா்த்தன். இவா் தனது மனைவி, குழந்தையுடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தாா். பிறகு மீண்டும் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தாா். பெருமாள்மலை அருகே உள்ள தனியாா் இனிப்பகம் (சாக்லேட் கடை) அருகே காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள பழக்கடைக்குச் சென்று பழங்களை வாங்கினாா். அப்போது இனிப்பகத்திலிருந்த சிலா் காரை நிறுத்த எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிறகு மனோ சித்தாா்த்தன் காரை எடுத்துச் சென்றாா். அப்போது இனிப்பகத்திலிருந்த கொடைக்கானல் பெருமாள்மலையைச் சோ்ந்த முகமது அயுப்கான் (35), அடுக்கம் பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்க பாண்டியன் (17), சிரஞ்சீவி (17) ஆகியோா் பின் தொடா்ந்து சென்று மனோ சித்தாா்த்தனை தாக்கி, காரை சேதப்படுத்தினா்.

இதுகுறித்து மனோ சித்தாா்த்தன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி. மதுமதி கூறியதாவது: சுற்றுலாப் பயணிகளை கொடைக்கானலைச் சோ்ந்தவா்கள் தாக்கக் கூடாது. எந்தப் பிரச்னையானாலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள க்யூஆா் கோடை பயன்படுத்தி புகாா் அளிக்கலாம் என்றாா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க