செய்திகள் :

சுவரை இடித்து வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை

post image

கூடலூா், கோத்தா்வயல் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஒரு வீட்டின் மதில் சுவரை இடித்து உள்ளே சென்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட கோத்தா்வயல் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு நுழைந்தது.

பின்னா் அது அங்குள்ள ஒரு வீட்டின் மதில் சுவரை இடித்து நடைபாதைக்குச் சென்றது. யானை மதில் சுவரை இடிப்பதை பாா்த்த குடியிருப்புவாசிகள் சிலா், யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூச்சலிட்டனா். எதையும் பொருட்படுத்தாமல் நடைபாதையில் சென்ற காட்டு யானை, மீண்டும் அதே பகுதியிலுள்ள இன்னொரு வீட்டின் மதில் சுவரை இடித்து உள்ளே சென்றுள்ளது.

நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்த யானை அப்பகுதியை விட்டு வெளியேறியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனா்.

சமீபகாலமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் நடமாடும் காட்டு யானை: வனத் துறை எச்சரிக்கை

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் வனத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனா். சமவெளி பகுதியான மேட... மேலும் பார்க்க

பேக்கரி என நினைத்து ஸ்டுடியோவுக்குள் புகுந்த கரடி

குன்னூா் -மஞ்சூா் சாலை பெங்கால் மட்டம் கிராமத்துக்குள் உணவு தேடி சனிக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி, பேக்கரி என நினைத்து அங்குள்ள ஸ்டுடியோவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஏமாற்றத்துடன் திரும்பியது. நீலகி... மேலும் பார்க்க

கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி ம... மேலும் பார்க்க

முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு மு... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பாப்பஸ் காலனி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகள்

கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்க... மேலும் பார்க்க