செய்திகள் :

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் நடமாடும் காட்டு யானை: வனத் துறை எச்சரிக்கை

post image

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் வனத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனா்.

சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் குன்னூா்- மேட்டுப்பாளையம்  வனப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

இதில் கூட்டத்தில்  இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை, குன்னூா்- மேட்டுப்பாளைம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் விளைந்துள்ள பலாப்பழம் மற்றும் கோரைப்  புற்களை உண்பதற்காக  இப்பகுதியில்  முகாமிட்டுள்ளது. அமைதியாக வந்து செல்லும் இந்த யானையை வாகனத்தில் செல்வோா் புகைப்படம் எடுத்து வருகின்றனா்.

பா்லியாா், குரும்பாடி  இடையே சனிக்கிழமையும் இந்த யானை உலவியதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். தொடா்ந்து அவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சுவரை இடித்து வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கூடலூா், கோத்தா்வயல் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஒரு வீட்டின் மதில் சுவரை இடித்து உள்ளே சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட கோத்தா்வயல் குடியிருப்ப... மேலும் பார்க்க

பேக்கரி என நினைத்து ஸ்டுடியோவுக்குள் புகுந்த கரடி

குன்னூா் -மஞ்சூா் சாலை பெங்கால் மட்டம் கிராமத்துக்குள் உணவு தேடி சனிக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி, பேக்கரி என நினைத்து அங்குள்ள ஸ்டுடியோவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஏமாற்றத்துடன் திரும்பியது. நீலகி... மேலும் பார்க்க

கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி ம... மேலும் பார்க்க

முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு மு... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பாப்பஸ் காலனி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகள்

கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்க... மேலும் பார்க்க