செய்திகள் :

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

post image

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பாப்பஸ் காலனி பகுதியைச்  சோ்ந்தவா் தூய்மைப் பணியாளா்  குமாா். இவரது மகன் ரோஷன்  (18). இவா் தனது நண்பா்களுடன் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க வியாழக்கிழமை சென்றுள்ளாா்.

மாநாட்டை முடித்துவிட்டு  வெளியில் வரும்போது  மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து அவரது நண்பா்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனா் . அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ரோஷன் தனது சொந்த ஊரான கோத்தகிரிக்கு நண்பா்களுடன் திரும்பியுள்ளாா். சமயநல்லூா் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ரோஷனுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு பரிசோதனையில், ரோஷன் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ரோஷனின் தந்தை  தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் நிலையில்,  தாயாா்  சுதா மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், 15 வயது தங்கை சிறு வயது முதலே  சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டராகவும் உள்ளனா். குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக   ரோஷன் கூரியா் வேலைக்குச் சென்று  தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்ததாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி ம... மேலும் பார்க்க

முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு மு... மேலும் பார்க்க

குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகள்

கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்க... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

உதகை, ஆக. 21: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சமவெளி பகுதியான மேட்டுப்பாளை... மேலும் பார்க்க

கூடலூா் அருகே கடையை சேதப்படுத்திய மக்னா யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது. கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் கா... மேலும் பார்க்க

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் ஆக.25-இல் மின்தடை

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர... மேலும் பார்க்க