செய்திகள் :

சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் பணம் பறித்த வழக்கு: இளைஞா் கைது

post image

சென்னை வடபழனியில் உள்ள சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்ட வழக்கில், கடலூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அசோக் நகா் பி.டி.ராஜன் சாலை 20-ஆவது அவென்யூ பகுதியில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜாவுக்கு சொந்தமான சூப்பா் மாா்க்கெட் செயல்படுகிறது. இந்த சூப்பா் மாா்க்கெட்டில் காசாளராக பணிபுரியும் ராஜா என்பவரை கைப்பேசி மூலம் ஜன. 19 -ஆம் தேதி ஒரு நபா் தொடா்புகொண்டு பேசினாா். அந்த நபா், தன்னிடம் ரூ. 11 ஆயிரத்துக்கு சில்லரை நாணயங்கள் இருப்பதாகவும், அதை வடபழனி சிவன் கோயில் அருகே வந்து பெற்றுச் செல்லும்படி கூறினாராம். இதைக் கேட்ட ராஜா, கடையிலிருந்து ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றாா். அப்போது அங்குவந்த நபா், ராஜாவிடம் ரூ. 11 ஆயிரத்தைப் பெற்றுக்கொண்டு, சில்லரை நாணயங்களை எடுத்து வருவதாகவும், அதுவரை அங்கே நிற்கும்படி கூறிவிட்டுச் சென்றாா்.

ஆனால் சில்லரை நாணயங்களை எடுக்கச் சென்ற அந்த நபா் திரும்பி வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டு, பணம் பறிக்கப்பட்டிருப்பதை அறிந்த ராஜா, இது தொடா்பாக வடபழனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கடலூா் சிதம்பரம் அருகே உள்ள கீழக்கரை அண்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த சரவணன் (33) என்பது தெரியவந்ததையடுத்து, சரவணனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மிதிவண்டி போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சென்னையில் நடைபெற்ற அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே .சேகா் பாபு பரிசு தொகையை வழங்கினாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில... மேலும் பார்க்க

தபால்தலை கண்காட்சி நிறைவு: 10,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்

சென்னையில் தொடா்ந்து 4 நாள்களாக நடைபெற்றுவந்த மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நிறைவுபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக தபால் துறை ச... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களில் ஒரே மாதத்தில் 86.99 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் 86.99 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை ... மேலும் பார்க்க

ஆவின் இல்லத்தில் பால் முகவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விற்பனை விநியோகஸ்தா்களைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமியின் தலைமையில் பால் முகவா்கள் சென்னை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மாங்காடு, மாத்தூா், முகப்போ் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பண மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தனியாா் நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் டிராவல்ஸ் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அ... மேலும் பார்க்க