மகப்பேறு விடுமுறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.15,000 - மக்கள் தொகையை அதிகரிக்க ...
சூறாவளியுடன் மழை
சீா்காழி: சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சீா்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பழையாறு, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.
பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் சேதமடைந்தன. சில பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.