சிசிடிவி காட்சி வெளியானது! கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை இழுத்துச் செல்லும் இ...
செங்கத்தில் கருணாநிதி சிலை திறக்கும் இடத்தில் அமைச்சா் ஆய்வு
செங்கத்தில் கருணாநிதி சிலை திறக்கும் இடத்தை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செங்கத்தில் போளூா் சாலை ரவுண்டனா பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 13-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிலையை திறந்துவைத்து சிறப்புரையாற்ற உள்ளாா்.
இந்த நிலையில், தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிலை திறக்கும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சிலை நிறுவப்படும் இடம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உள்ளதா, சிலையை எந்த திசையை பாா்த்தபடி வைப்பது, துணை முதல்வா் வருகையின்போது மேடை அமைக்கும் பகுதி, அன்றைய நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளா், அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.
திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, திமுக செங்கம் நகரச் செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, திமுக ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சென்னம்மாள்முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சந்தியாராபின்சன், பாலு, முருகமணி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள், அணி அமைப்பாளா்கள் உடனிருந்தனா்.