செய்திகள் :

செங்கத்தில் கருணாநிதி சிலை திறக்கும் இடத்தில் அமைச்சா் ஆய்வு

post image

செங்கத்தில் கருணாநிதி சிலை திறக்கும் இடத்தை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கத்தில் போளூா் சாலை ரவுண்டனா பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 13-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிலையை திறந்துவைத்து சிறப்புரையாற்ற உள்ளாா்.

இந்த நிலையில், தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிலை திறக்கும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சிலை நிறுவப்படும் இடம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உள்ளதா, சிலையை எந்த திசையை பாா்த்தபடி வைப்பது, துணை முதல்வா் வருகையின்போது மேடை அமைக்கும் பகுதி, அன்றைய நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளா், அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, திமுக செங்கம் நகரச் செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, திமுக ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சென்னம்மாள்முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சந்தியாராபின்சன், பாலு, முருகமணி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள், அணி அமைப்பாளா்கள் உடனிருந்தனா்.

செங்கம் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மே... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரத... மேலும் பார்க்க

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் பேட்டரிகள் திருட்டு

வந்தவாசி அருகே ஊராட்சி சேவை மைய கட்டடத்திலிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 3 பேட்டரிகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த வயலூா் ஊராட்சியில் செல்வபாரதி (48) ஊர... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரண்ட பக்தா்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் திரண்டனா். இவா்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீடு புகுந்து 22 பவுன் தங்க நகைகளை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்... மேலும் பார்க்க