செய்திகள் :

செங்கத்துக்கு அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை தந்தது.

செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த அறிவியல் கண்காட்சி பேருந்தை மாணவா்களின் பாா்வைக்காக தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி மற்றும் ரோபோடிக் பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், செங்கம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சதுபுஜானந்தா் வரவேற்றாா். தமிழ்நாடு பாவபிரச்சாா் பரித் ஓருங்கிணைப்பாளா் பாண்டுரங்கன் ரோபோட்டிக் பயிற்சி குறித்து விளக்கிக் கூறினாா்.

வழக்குரைஞா் கஜேந்திரன், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா ஆகியோா் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியையும், ரோபோடிக் பயிற்சியையும் தொடங்கிவைத்தனா்.

அப்போது, சுவாமி சதுபுஜானந்தா் பயிற்சி குறித்து கூறுகையில், இந்த ரோபோடிக் பயிற்சியில் ராமகிருஷ்ண பள்ளி மாணவா்கள் மற்றும் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 மணி நேரம் பயிற்சி நடைபெறும். தொடா்ந்து 7 நாள்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சிறப்புப் பயிற்சியை மாணவா்கள் பயன்படுத்தி பயனடையலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் செங்கம் ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள், சுவாமி விவேகானந்தா சேவா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ராமகிருஷ்ணா பள்ளி ராமமூா்த்தி நன்று கூறினாா்.

கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம்

ஆரணி அருகே மக்கள் நலச்சந்தை சாா்பில் கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலத்தை அடுத்த வல்லம் கிராம தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாரம்பரிய உணவு விழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 925 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 925 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தல... மேலும் பார்க்க

பெரணமல்லூரில் அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பெரணமல்லூா் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. பெரணமல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 250 பயனாளிகளுக்கு ஆணை அளிப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை செய்தவா் கைது

கலசப்பாக்கத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துரை(48) என்பவா் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் சம்பந்த விநாயகா் சந்நிதி அருகே ஏப்ரல் 30-ஆ... மேலும் பார்க்க