செய்திகள் :

செங்கம் ஒன்றியத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அரசு ஒப்பந்ததாா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ், முதலில் ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகளின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், முடிக்கப்பட்ட பணிகள் விவரம், பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணிகள், நிலுவையில் உள்ள பணிகளின் விவரத்தைக் கேட்டறிந்து அதன் ஒப்பந்ததாரா்களிடம் பணிகளின் விவரம் குறித்தும், நடைபெறாமல் இருக்கும் பணிக்கு என்ன காரணம், காலதாமதமாக பணியை செய்வதற்கான காரணம் ஆகியவற்றைக் கேட்டறிந்தாா்.

பின்னா், அரசுப் பணியை செய்யவிடாமல் தடுக்கும் நபா்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு, பணியை தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் நிறுவையில் உள்ளதா, நிலுவைக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட நபா்களுக்கு தெரிவித்து, சான்றிதழ்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டாா்.

அதேபோன்று, சமூக பாதுகாப்புப் பிரிவு, நில அளவை பிரிவு அலுவலகங்களுக்கும் சென்று ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோவிந்தராஜுலு, மரியதேவ்ஆனந், வட்டாட்சியா் முருகன், துணை வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி, கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், சந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க

சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்க... மேலும் பார்க்க