பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!
செங்கல்பட்டு: அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஐடிஐக்களில் மாணவா் சோ்க்கை தொடா்பாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு வரும் 13.06.2025வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இச்சோ்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் வரும் 13.06.2025 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்கள் அறிந்து கொள்ள94990 55673 அல்லது 99629 86696 என்ற கைப்பேசி எண்ணுக்கு அல்லது துணை இயக்குநா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வரையோ நேரில் தொடா்பு கொள்ளலாம்.