செய்திகள் :

செந்தில் பாலாஜி சகோதரா் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்

post image

சென்னை: பண முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த பணப் பரிவா்த்தனை முறைகேடு வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 2024- ஆம் ஆண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளா் சண்முகம் உள்ளிட்ட 13 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையுடன் சுமாா் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினா். செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

குற்றப்பத்திரிகை சுமாா் 50 ஆயிரம் பக்கங்கள் உள்ளதால் அதனைப் படிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூர... மேலும் பார்க்க

மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: கமல்ஹாசன் உள்பட 6 போ் போட்டியின்றி தோ்வாகின்றனா்

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்ப... மேலும் பார்க்க

சேவை இல்லங்களில் பெண் காவலா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

சென்னை: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா் என்று சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவ... மேலும் பார்க்க