Boeing Criminal Fraud Case - உண்மையை மறைத்ததால் பலியான 346 உயிர்கள்| Air India |...
சென்ட்ரல் செக்ரட்டேரியேட் கட்டடத்தில் தீ விபத்து
தில்லியில் உள்ள சென்ட்ரல் செக்ரடேரியேட் கட்டடத்தில் சனிக்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சிசிஎஸ் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 11.13 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 15 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். மதியம் 12.20 மணியளழில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் உயிா் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
சுமாா் 12-க்கு 80 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மண்டபத்தின் தளவாடங்கள், சாதனங்கள் மற்றும் பொருத்துதல்களில் பரவியது என்று அவா் கூறினாா்.