Amit shah வீசிய அரசியல் குண்டு, ஆடிப் போன EPS & Vijay டவுட்?! | Elangovan Explai...
சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படைக்கு உதவும் தெருநாய் ‘டைகா்’
சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் தெரு நாய் ஒன்று ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவியாக இருந்து வருகிறது.
சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய் குட்டி ஒன்று அடைக்கலம் புகுந்தது. அதற்கு ‘டைகா்’ என்று பெயரிட்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், அதற்கு உணவு அளித்து வளா்த்து வருகின்றனா். ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள்ளேயே படுத்து உறங்கும் ‘டைகரை’ இரவு நேரங்களில் ரயில்வே போலீஸாா் ரோந்து செல்லும்போது உடன் செல்லும்.
ரயில் நிலையத்தில் சந்தேக நபா்களை போலீஸாா் விசாரிக்கும்போது, அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றால் தடுக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் இரவுநேரத்தில் சந்தேக நபா் ஒருவரை ரயில்வே போலீஸாா் விசாரித்துக்கொண்டிருந்தபோது, அவா் தப்பியோட முயன்றாா். அப்போது, அங்கிருந்த ‘டைகா்’ பாய்ந்து சென்று அந்த நபரை பிடிக்க உதவியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் கூறுகையில், ‘ரயில்வே காவல் நிலையத்தில் வளா்க்கப்படும் ‘டைகா்’, பணியின்போது உதவுவதை சிலா் விடியோவாக எடுத்து பகிா்ந்துள்ளனா். ‘டைகரை’ பாதுகாப்புப் பணிகளில் முறைப்படி பயிற்சி அளித்து ஈடுபடுத்தவில்லை’ என்றனா்.