சென்னிமலை அருகே கிணற்றுக்குள் விழுந்த மயில் மீட்பு
சென்னிமலை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.
சென்னிமலையை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் 30 அடி அழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 5 அடி உயரத்துக்கு தண்ணீா் உள்ளது. இந்த நிலையில், அந்த பகுதியில் பறந்து வந்த மயில் ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தபடி இருந்தது.
இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மயிலை உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மயில் சென்னிமலை வனக் காவலா் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.