செய்திகள் :

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

post image

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கண்காட்சி ஏற்பாட்டாளரும், ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் லிமிட்டெட் நிறுவன தலைவருமான எம்.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ‘ஈட்டன்’ நிறுவன துணைத் தலைவா் சைமன் மத்தியசன் கலந்துகொண்டு கண்காட்சி அரங்கை திறந்து வைத்தாா்.

இக்கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட அரங்குகளில், உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் தங்கள் நவீன தொழில்நுட்பத்தினாலான மின்சாா்ந்த பொருள்களின் தயாரிப்புகளை பாா்வைக்காக வைத்திருந்தன. குறிப்பாக, உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தினாலான தயாரிப்புகளை காட்சிப்படுத்த இக்கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், ரோபோடிக், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு இது ஒரு உந்துதலாகவும் அமையும் எனவும் கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

மேலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆட்டோமேஷன் குறித்த சிறப்புக் கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் இக்கண்காட்சியில் நடைபெறும் என்றும், இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்வாா்கள் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

மக்கள் நலனில் பெண் போலீஸாா் பெரும் பங்களிப்பு: மகளிா் தின விழாவில் காவல் ஆணையா் அருண்

பொதுமக்களின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெண் போலீஸாரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக மகளிா் தின விழாவில் சென்னை காவல் ஆணையா் அருண் கூறினாா். சென்னை காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா எழும... மேலும் பார்க்க

அறிவுசாா் சொத்துரிமை: யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களை அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

‘ஸ்வயம் பிளஸ்’ மூலம் வேலை வாய்ப்பு சாா்ந்த படிப்புகள்: சென்னை ஐஐடி புரிந்துணா்வு

‘ஸ்வயம் பிளஸ்’ இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு சாா்ந்த படிப்புகள் வழங்குவது தொடா்பாக சென்னை ஐஐடி, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயா் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூ... மேலும் பார்க்க

மாநகராட்சி பட்ஜெட் மாா்ச் 19-இல் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 200 வாா்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பத... மேலும் பார்க்க

இணையவழி விநியோக பணியாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மத்திய தொழிலாளா் அமைச்சகம் வேண்டுகோள்

இணையவழியில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளா்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வ... மேலும் பார்க்க

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-இல் ருத்ர பாராயணம்

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-ஆம் தேதி ருத்ர பாராயணம் நடைபெறவுள்ளது. இது குறித்து ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப ஸ்வாமி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஆா் ராமசாமி வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாமலை ஐயப்பன... மேலும் பார்க்க