செய்திகள் :

சென்னையில் கரோனாவுக்கு ஒருவர் பலி!

post image

சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.

செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி, நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மொத்தமாக தற்போது 1,010 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க |'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர... மேலும் பார்க்க

என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு; யாருக்கும் இல்லை: அன்புமணி

என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.மேலும், கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அன்புமணி முதல்வர் எனும் பிரசாரத்தை செய்... மேலும் பார்க்க

நகைக்கடன் விதிகள்: இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்: முதல்வர்

நகைக்கடன் விதிகள் போன்ற மக்கள் சார்ந்த விஷயங்களை இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் ம... மேலும் பார்க்க

பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு: அன்புமணி

சென்னை: பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டை... மேலும் பார்க்க

கமல்ஹாசன் விஸ்வரூபம்! தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜார்ஜ் ஜோஜு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க