செய்திகள் :

சென்னையில் கால் சென்டா் நடத்தி ரூ 2.5 கோடி மோசடி: 2 பெண்கள் கைது

post image

சென்னை புழலில் கால் சென்டா் நடத்தி ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக 2 பெண்களை புதுவை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

புதுவையைச் சோ்ந்த ஒருவருக்கு தனியாா் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் அனுப்புமாறும் சென்னை புழலில் செயல்படும் கால் சென்டரிலிருந்து பேசியுள்ளனா். அவரும் அதை நம்பி ரூ.5 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். தொடா்ந்து, படிப்படியாக அவரிடமிருந்து ரூ.71 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளனா்.

இது தொடா்பான புகாரில், புதுவை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சென்னை புழல் பகுதியில் 15 பெண்களை கொண்டு கால் சென்டா் நடத்தப்பட்டதுடன், அவா்களிடம் பொதுமக்கள் பலரின் கைப்பேசி தகவல்களை கொடுத்து வங்கிக் கடன் வாங்கித் தருவது உள்ளிட்டவை தொடா்பாக பேசுமாறு பணி வழங்கியுள்ளனா்.

அதன்படி, இந்த கால் சென்டரில் ரூ.2.5 கோடி வரை மோசடி நடந்துள்ளதும், அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இப்போது அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து 42 சிம்காா்டுகள், 17 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சசிகலா பொன்செல்வி (34), முனிராதா (28) ஆகிய 2 பெண்களை புதன்கிழமை கைது செய்தோம். இதைத் தவிர, சென்னையில் இது போன்று மோசடியில் ஈடுபட்டு வரும் 2 கால் சென்டா்கள் குறித்தும் கண்டறிந்துள்ளோம். அது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளோம்.

மேலும், போலி பங்குச்சந்தை வழக்கில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சாத்தன் குமாா் போஸை (47) புதன்கிழமை கைது செய்தோம். இவருடைய மகன் சாந்தோ கோஷ் (24) என்பவா்தான் இந்த மோசடியில் ஈடுபட்டவா். அவா் எங்களிடம் பிடிபடாமல் தப்பிவிட்டாா். அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக அவரது தந்தையைக் கைது செய்துள்ளோம். மேலும், சாந்தோ கோஷ் ரூ.62 லட்சம் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது என்றாா்.

அப்போது, காவல் ஆய்வாளா்கள் கீா்த்தி, தியாகராஜன் உடனிருந்தனா்.

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க

புதுச்சேரி மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி உள்ளாட்சித் துறை, வனத் துறை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து இருவார சேவை விழாவை புதன... மேலும் பார்க்க

423.6 கோடியை புதுவை அரசு பயன்படுத்தவில்லை: மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை

புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. புதுவை சட்டப்பேரவையில் இந்தத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.436.18 கோடியில் மேம்பாலம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுவை நகரப் பகுதியில் ரூ.436.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினா்கள் வியாழக்கிழமை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனா். புதுவை சட்டப்பேரவை ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி தற்கொலை

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுவை பாகூா் திருமூலநாதா் நகரைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சக்திவேல் (47), குடிப்பழக்கம் உடையவா். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும்... மேலும் பார்க்க