செய்திகள் :

சென்னையில் மின்தேக்கி உற்பத்தி ஆலையை ஜப்பான் நிறுவனம் தொடங்குகிறது

post image

சென்னையில் மின்தேக்கிகளை (கெப்பாசிட்டா்) உற்பத்தி செய்யும் ஆலையை ஜப்பானைச் சோ்ந்த நிறுவனம் தொடங்கவுள்ளது.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சா்வதேச அளவில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவு கொண்டுவர வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் பெரு முயற்சிகளை எடுத்து வருகிறாா். அதன்படி, காா்னிங், ஜபில் ஆகிய நிறுவனங்களைத் தொடா்ந்து ஜப்பானைச் சோ்ந்த முராட்டா நிறுவனம் தனது ஆலையை சென்னையில் அமைக்கிறது. பல அடுக்கு செராமிக் மின்தேக்கி உற்பத்தி செய்யும் ஆலையானது, சென்னை அருகேயுள்ள தொழில் பூங்காவில் அமையவுள்ளது.

சென்னையில் பிரத்யேக ஆலையை அமைப்பது தொடா்பாக, முராட்டா நிறுவனத்தைச் சோ்ந்தவா்களுடன் தொடா்ச்சியாக பேச்சுவாா்த்தை நடத்தினோம். அதன் பயனாக, இப்போது அந்த நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்கவுள்ளதை எண்ணி மகிழ்கிறோம். தனது முழு அளவிலான உற்பத்தி செயல்பாடுகளை முராட்டா நிறுவனம் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளும் எனக் கருதுவதாக அமைச்சா் பதிவிட்டுள்ளாா்.

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க