செய்திகள் :

சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு

post image

சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக ஒருமணி நேரத்தில் 271.5 மி.மீ மழை அளவு கொட்டித் தீர்த்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. 11 மணிக்கு தொடங்கிய மழை ஒருமணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. குறிப்பாக வடசென்னையில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்தது.

கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு பணி முடிந்து வீடுகளுக்கு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் மேக வெடிப்பு காரணமாகவே சென்னையில் அதிகளவில் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்: பலத்த பாதுகாப்பு

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையளவு விவரம்(மி.மீட்டரில்):

மணலி- 271.5

மணலி புது டவுன்- 255.6

விம்கோ நகர்-228.6

கொரட்டூர் மண்டலம் 7- 182.4

எண்ணூர் - 150

கத்திவாக்கம்- 136.5

திருவொற்றியூர்-126

அயப்பாக்கம்- 121.8

பாரிஸ்-115.5

அம்பத்தூர்- 112.2

நெற்குன்றம்- 110.1

கொளத்தூர் - 96.6

காசிமேடு - 95.1

இதனிடையே ஞாயிறு இரவும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் இடியுடன் கூடிய மழைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளதாக டெல்டா வெதர்மேன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

A cloudburst in Chennai's Manali has caused 271.5 mm of rain to fall in one hour.

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா். செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க