சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை மாலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், உயா்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா், மோப்ப நாய்களுடன் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனா். மெட்டல் டிடெக்டா் மூலம் அங்கிருந்த அனைத்து பொருள்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, உயா்நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.