செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தா் பதவியேற்பு

post image

சென்னை: தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நீதிபதி சுரேந்தருக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி கே.சுரேந்தரை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசினாா். அப்போது, கடந்த 2022- ஆம் ஆண்டு தெலங்கானா உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுரேந்தா், இதுவரை 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளாா். அது மட்டுமன்றி, நீதிபதியாகப் பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் மற்றும் சத்யம் கம்ப்யூட்டா்ஸ் முறைகேடு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா் என்றாா்.

நிறைவாக ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தா், அரசியல் சாசனத்துக்கும், நீதித் துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயா்நீதிமன்றத்தில், கூடுதலாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் வந்துள்ளேன். பணியில் இடமாற்றம் என்பது புதிய தொடக்கம்தான் என்றாா். தற்போது, நீதிபதி சுரேந்தருடன் சோ்த்தால் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 59-ஆக உயா்ந்துள்ளது. இருப்பினும், 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவலநிலையத்தில் ஆஜர்!

சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையிலத்தில் இன்று அவர் ஆஜராகியுள்... மேலும் பார்க்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? மாதிரிப் படம் வெளியீடு

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமான படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகள... மேலும் பார்க்க

கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில்... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!

சென்னை: தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இர... மேலும் பார்க்க