சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி
சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் காலமானாா்.
இதையடுத்து மத்திய, மாநில அமைச்சா்கள், உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகா்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மற்றும் அதிகாரிகள் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் வி கே எம் தோட்ட இல்லத்தில் அவரது மகன் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தினா். அப்போது பாஜக மாவட்ட தலைவா் செந்தில் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.
படம் உண்டு..ம்ந்23ஸ்ந்ம்ய்... மறைந்த மூத்த வழக்குரைஞா் வி.கே. முத்துசாமி உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்துகிறாா் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்.