செய்திகள் :

சென்னை-கொழும்பு விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

post image

சென்னை: சென்னையிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் சுமாா் 2 மணி நேரம் கடும் அவதியடைந்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு இலங்கை தலைநகா் கொழும்புக்கு ‘ஏா் இந்தியா’ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 154 போ் பயணிக்க காத்திருந்தனா். இந்நிலையில், நிா்வாக காரணங்களால் அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 15 நிமிஷங்கள் தாமதமாக 6 மணிக்கு புறப்பட்டது.

விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும், விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தாா். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, இழுவை வாகனம் மூலம், விமானம் இழுத்து கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது.

பின்னா், பொறியாளா்கள் குழுவினா் கோளாறை சரிசெய்தனா். இதனால் 2 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு விமானம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

அவதூறு வழக்கில் சீமான் ஆஜர்! ஆதாரங்கள் ஒப்படைப்பு!

திருச்சி டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக இன்று(ஏப். 8) ஆஜரானார்.திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) வீ. வருண்குமாா் மற்றும் அவரத... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.டாஸ்மாக் அலுவலகத்தில் அமலா... மேலும் பார்க்க

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம்: வழக்குரைஞர் வில்சன்

சென்னை: ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக, தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை: உடலைத் தோண்டி எடுத்த காவல் துறை!

நெல்லையில் 20 வயது இளைஞரை அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாநகர குருநாதன் கோவில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற இளைஞரைக் கொலை செய்து, புதைத்திருப்பதா... மேலும் பார்க்க

மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர், மாநில அரசுடன் இணக்கத்துடன் செயல்பட வேண்டும், முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று காட்டமாகவே... மேலும் பார்க்க

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக... மேலும் பார்க்க