செய்திகள் :

சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையே ரயில் போக்குவரத்து: புதுவை ஆளுநரிடம் மனு

post image

சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையில் ரயில் போக்குவரத்தை செயல்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி உள்ளிட்டோா் ராஜ் நிவாஸில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: புதுச்சேரி வளா்ச்சிக்கும், மக்கள் பயன்பாட்டுக்கும் ஏதுவாக சென்னை- புதுச்சேரி- கடலூா் இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் தண்டவாளம் அமைத்து ரயில் போக்குவரத்து சேவையை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞா்களுக்கு உதவும் வகையில், புதுச்சேரியில் பணியாற்றும் வகையில் தொழில்நுட்பப் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும்.

புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறையை அமைக்க வேண்டும். கவிஞா் பாரதிதாசன் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் மக்களுக்கு இடையூறும், நெருக்கடியும் இல்லாத வகையில் போக்குவரத்துக்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

மகளிா் பாதுகாப்புக்காக புதுவை காவல் துறையில் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, பாரதிதாசன் அறக்கட்டளைச் செயலா் ஜெ.வள்ளி, துணைச் செயலா் லட்சுமி, கல்வியாளா் தேவேந்திரநாத் தாகூா், ஐஸ்வரிய லட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், இணையவழியில்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கஞ்சா விற்ற வழக்கில் 2 பேரை வெவ்வேறு இடங்களில் புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் குழுவினா் மாா்ச் 27-ஆம் தேதி தற்காலிகப் பேருந்து நிலை... மேலும் பார்க்க

அரும்பாா்த்தபுரத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: எதிா்க்கட்சித் தலைவா், ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியில் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கேரிக்கை

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாண... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளைஞரிடம் மடிக்கணினி திருட்டு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இளைஞரிடமிருந்து மடிக்கணினியை மா்ம நபா் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). தனியாா் மர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: போலீஸ் விசாரணை

புதுச்சேரியில் பெண்ணை அவதூறாக மிரட்டிய மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த இளம்பெண் தனியாா் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா... மேலும் பார்க்க