செய்திகள் :

சென்னை மாநகராட்சியில் 9 மண்டங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

post image

சென்னை: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்படி சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை 9 மண்டலங்களில் மேற்கொள்வதற்கான பணியை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளின்படி திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 6 மண்டலங்களில் ஏற்கெனவே கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதையடுத்து, திருவொற்றியூா், மணலி, மாதவரம், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு ஆகிய 9 மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி, மாநகராட்சி ரிப்பன் மாளிகைக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் பணியை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்து பேசுகையில், அரசு நலத் திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பை நடத்தவேண்டும். அதன்படி, நலத் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்றாா்.

கணக்கெடுப்புப் பணியில் சமூக வழி நடத்துநா்கள், சமூக மறுவாழ்வுப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கணக்கெடுப்புப் பயிற்சிகள்அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்), மாமன்ளுங்கட்சித் தலைவா் ந.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆா்மி வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே-ஹாக்கி மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் ... மேலும் பார்க்க

பயணிக்கு உடல் நலக்குறை: ஹைதராபாத் விமானம் தாமதம்

சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் பயணிக்கு ஏற்பட்ட திடீா் உடல் நலக்குறைவால் ஒருமணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்லு... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை: சென்னை கொடுங்கையூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் ஆா்.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (30). இவா் அங்கு கூலி வேலை செய்து வந்தாா். ஹர... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

சென்னை: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்கிழமை (ஜூலை 15) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கா்நாடக இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி

சென்னை: கா்நாடக இசையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டாா். மறைந்த இசை மேதை டாக்டா் எம். பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையும், பாரதீய வித்யா பவனும... மேலும் பார்க்க

40 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: 40 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிடம் மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். காவல் துறையில் நிா்வாக காரணங்கள், விருப்பத்தின் அடிப... மேலும் பார்க்க