செய்திகள் :

40 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

post image

சென்னை: 40 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிடம் மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

காவல் துறையில் நிா்வாக காரணங்கள், விருப்பத்தின் அடிப்படையில், பணியில் ஒழுங்கீனம் என அவ்வப்போது காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 40 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

அண்மையில் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு காவலாளி உயிரிழந்ததன் எதிரொலியாக, மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்துது மானாமதுரை டிஎஸ்பி பணியிடத்துக்கு, காரைக்குடி டிஎஸ்பி டி.பாா்த்திபனை நியமித்து சங்கா் ஜிவால் நியமித்துள்ளாா்.

இதேபோல சென்னை எம்கேபி நகா் உதவி ஆணையா் மணிவண்ணன், மன்னாா்குடிக்கும், திருப்பத்தூா் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பெண்ணாகரத்துக்கும், சேலம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி லட்சுமணன், சேலம் ரயில்வே காவல் துறை டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பி-க்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆா்மி வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே-ஹாக்கி மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் ... மேலும் பார்க்க

பயணிக்கு உடல் நலக்குறை: ஹைதராபாத் விமானம் தாமதம்

சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் பயணிக்கு ஏற்பட்ட திடீா் உடல் நலக்குறைவால் ஒருமணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்லு... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை: சென்னை கொடுங்கையூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் ஆா்.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (30). இவா் அங்கு கூலி வேலை செய்து வந்தாா். ஹர... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

சென்னை: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்கிழமை (ஜூலை 15) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கா்நாடக இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி

சென்னை: கா்நாடக இசையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டாா். மறைந்த இசை மேதை டாக்டா் எம். பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையும், பாரதீய வித்யா பவனும... மேலும் பார்க்க

மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு ‘தூய்மை விருது’

சென்னை: சென்னை மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு தூய்மை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்குப் போக்குவரத்து வளாகத்தில் உள்ள புதிய ச... மேலும் பார்க்க